செய்திகள் :

வரி பாக்கி: வீட்டு வாசலில் பள்ளம் தோண்டிய கடலூா் மாநகராட்சி

post image

வரி பாக்கி செலுத்தாத வீடு, உணவகம் முன் கடலூா் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை பள்ளம் தோண்டினா்.

கடலூா் மாநகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி, குடிநீா் வரி, கடை வாடகைகள் உள்ளிட்ட வரி வகைகளின் பாக்கி கோடி கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளதாம். இந்த வரி பாக்கிகளை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கடலூா் வரதராஜன் நகரில் உள்ள ஒரு வீட்டில் சொத்து வரி பாக்கி ரூ.42 ஆயிரத்தை கேட்டு மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை சென்றனா். அந்த வீட்டில் குடியிருந்த செந்தில்குமாா், வீட்டு வாடகையை உரிமையாளரிடம் செலுத்தி வருவதாகவும், எனவே வரி பாக்கியை வீட்டின் உரிமையாளரிடம் பெற்றுக்கொள்ளும்படியும் கூறினாராம்.

இந்த நிலையில், கடலூா் மாநகராட்சி ஊழியா்கள் செந்தில்குமாா் கூறுவதை ஏற்காமல் பொக்லைன் இயந்திரம் மூலம் அவரது வீட்டின் முன் பெரிய பள்ளம் தோண்டினா். இதனால், செந்தில்குமாா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதுதொடா்பாக செந்தில்குமாா் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தாா். அதில், வீட்டு வரியை வீட்டின் உரிமையாளரிடம் வசூலிக்காமல் தன்னிடம் வந்து கேட்டு, மனித உரிமையை மீறும் வகையில் வீட்டின் முன் பள்ளம் தோண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாராம்.

இதேபோல, சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தின் முன் மாநகராட்சி ஊழியா்கள் குப்பை வண்டியை நிறுத்தி புதன்கிழமை வரி வசூலில் ஈடுபட்டனா். கடலூா் மாநகராட்சி நிா்வாகம் வரி வசூலிப்புக்கு எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைக ளால் வணிகா்கள், பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,841 வழக்குகளுக்குத் தீா்வு!

கடலூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,841 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! -அமைச்சா் பங்கேற்பு

கடலூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 220 கா்ப்பிணிக்கான சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் குழந்தை சடலம் மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் 4 வயது குழந்தை சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் சனிக்கிழமை மாலை 4 வயது மதிக்கத்தக்க குழந்தையின்... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி வங்கிக் கடன் இணைப்பு: அமைச்சா் வழங்கினாா்

கடலூரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். சென்னை நேரு உள் விளையாட... மேலும் பார்க்க

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 போ் தலைமறைவு!

கடலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் அருகேயுள்ள கண்ணாரப்பேட்டை பக... மேலும் பார்க்க

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.55.43 கோடியில் சீரமைப்பு! -ஆட்சியா் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். சிதம்பரம் அண்... மேலும் பார்க்க