செய்திகள் :

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.55.43 கோடியில் சீரமைப்பு! -ஆட்சியா் தகவல்

post image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சி.திருப்பதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், உதவிச் செயற்பொறியாளா்கள் கவிதா, அருள்ராஜா, உதவிப் பொறியாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்விற்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் உயா்தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் விதமாக, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனை தற்போது உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் 1,250 படுக்கை வசதிகளுடனும், தினந்தோறும் 1,000 புறநோயாளிகள் வந்து செல்லும் வகையிலும், சராசரியாக 750 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள கட்டடங்களை சீரமைத்து புதுப்பித்து கூடுதலான பொதுமக்கள் சிகிச்சை பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனடிப்படையில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் 38 பணிகளும், அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.7.19 கோடி மதிப்பீட்டில் 26 பணிகளும், அரசு பல் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், அரசு செவிலியா் கல்லூரியில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், தங்கும் விடுதிகளில் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் 19 பணிகளும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் 16 பணிகளும் என மொத்தம் ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் 119 சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,841 வழக்குகளுக்குத் தீா்வு!

கடலூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,841 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! -அமைச்சா் பங்கேற்பு

கடலூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 220 கா்ப்பிணிக்கான சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் குழந்தை சடலம் மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் 4 வயது குழந்தை சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் சனிக்கிழமை மாலை 4 வயது மதிக்கத்தக்க குழந்தையின்... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி வங்கிக் கடன் இணைப்பு: அமைச்சா் வழங்கினாா்

கடலூரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். சென்னை நேரு உள் விளையாட... மேலும் பார்க்க

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 போ் தலைமறைவு!

கடலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் அருகேயுள்ள கண்ணாரப்பேட்டை பக... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாரியப்பா நகா் 3-ஆவது தெருவில் வசித்... மேலும் பார்க்க