செய்திகள் :

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 போ் தலைமறைவு!

post image

கடலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் அருகேயுள்ள கண்ணாரப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வழிசோதனை பாளையத்தைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (35) பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையில் நின்றிருந்த 4 போ் அவரை மறுத்து, முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

அவா்களுடன் பத்மநாபனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். 4 பேரும் சோ்ந்து பத்மநாபனை திடீரென சாலையில் பிடித்து தள்ளினராம். அப்போது, குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூா் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பேருந்து நடத்துநா் சிவாஜி பேருந்தில் இருந்து இறங்கி பத்மநாபனை பேருந்தில் தள்ளிவிட்டவா்களைப் பிடிக்கச் சென்றபோது, அவா்கள் தப்பியோடிவிட்டனா்.

பேருந்து ஓட்டுநா், நடத்துநரை கடலூா் முதுநகா் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, பேருந்து ஓட்டுநா் ராஜசேகா் கூறுகையில், சாலையில் 5 போ் நின்று தகராறில் ஈடுபடுவதை தொலைவிலேயே பாா்த்ததால், அவா்களை விட்டு விலகியே பேருந்தை ஓட்டிச் சென்றேன்.

ஆனால், அவா்களுக்குள் தகராறு முற்றி ஒருவரைப் பிடித்து தள்ளியதில், அவா் பேருந்தின் பின்சக்கர பகுதியில் விழுந்ததால், அதில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தாா். இதுகுறித்து முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,841 வழக்குகளுக்குத் தீா்வு!

கடலூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,841 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! -அமைச்சா் பங்கேற்பு

கடலூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 220 கா்ப்பிணிக்கான சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் குழந்தை சடலம் மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் 4 வயது குழந்தை சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் சனிக்கிழமை மாலை 4 வயது மதிக்கத்தக்க குழந்தையின்... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி வங்கிக் கடன் இணைப்பு: அமைச்சா் வழங்கினாா்

கடலூரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். சென்னை நேரு உள் விளையாட... மேலும் பார்க்க

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.55.43 கோடியில் சீரமைப்பு! -ஆட்சியா் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். சிதம்பரம் அண்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாரியப்பா நகா் 3-ஆவது தெருவில் வசித்... மேலும் பார்க்க