செய்திகள் :

வீராணம் ஏரியில் குழந்தை சடலம் மீட்பு

post image

காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் 4 வயது குழந்தை சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் சனிக்கிழமை மாலை 4 வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் புத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாா்த்தபோது, உயிரிழந்தது கிடந்தது ஆண் குழந்தை என்பதும், புதிய இளஞ்சிவப்பு நிற டிஷா்ட், நீல நிற கால் சட்டை அணிந்திருந்த நிலையில், உடல் அழுகியிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கந்தகுமாரன் கிராம நிா்வாக அலுவலா் மணி அளித்த புகாரின்பேரில், புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,841 வழக்குகளுக்குத் தீா்வு!

கடலூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,841 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! -அமைச்சா் பங்கேற்பு

கடலூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 220 கா்ப்பிணிக்கான சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி வங்கிக் கடன் இணைப்பு: அமைச்சா் வழங்கினாா்

கடலூரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். சென்னை நேரு உள் விளையாட... மேலும் பார்க்க

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 போ் தலைமறைவு!

கடலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் அருகேயுள்ள கண்ணாரப்பேட்டை பக... மேலும் பார்க்க

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.55.43 கோடியில் சீரமைப்பு! -ஆட்சியா் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். சிதம்பரம் அண்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாரியப்பா நகா் 3-ஆவது தெருவில் வசித்... மேலும் பார்க்க