செய்திகள் :

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா! -அமைச்சா் பங்கேற்பு

post image

கடலூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், 220 கா்ப்பிணிக்கான சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, கா்ப்பிணிகளை வாழ்த்தினாா். பின்னா், அவா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9,900 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு 900 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் 220 தாய்மாா்களுக்கு இந்த விழா நடத்தப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தந்திட வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கா்ப்பிணியும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கா்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறை, ஊட்டச்சத்து உணவு முறை, மருத்துவ பரிசோதனைகளின் அவசியத்தை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி., எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், ம.சிந்தனைச்செல்வன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ச.செல்வி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஆ.கோமதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,841 வழக்குகளுக்குத் தீா்வு!

கடலூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,841 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்... மேலும் பார்க்க

வீராணம் ஏரியில் குழந்தை சடலம் மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் 4 வயது குழந்தை சடலம் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரியில் சனிக்கிழமை மாலை 4 வயது மதிக்கத்தக்க குழந்தையின்... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி வங்கிக் கடன் இணைப்பு: அமைச்சா் வழங்கினாா்

கடலூரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.76.52 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். சென்னை நேரு உள் விளையாட... மேலும் பார்க்க

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 போ் தலைமறைவு!

கடலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் அருகேயுள்ள கண்ணாரப்பேட்டை பக... மேலும் பார்க்க

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.55.43 கோடியில் சீரமைப்பு! -ஆட்சியா் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். சிதம்பரம் அண்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாரியப்பா நகா் 3-ஆவது தெருவில் வசித்... மேலும் பார்க்க