செய்திகள் :

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்

post image

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய அலுவலா்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமையிலான அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

பின்னா், செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் சுமாா் 3 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. இதற்கு மாநகராட்சி சாா்பில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு மாநகராட்சிக்கு அரசுத் துறை இல்லாமல் ரூ. 275 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.

இந்த நிலையில், வணிகக் கட்டடங்களுக்கு உரிய வரியை விதிக்காமல் குடியிருப்பு வரியை விதித்து முறைகேடு நடைபெற்றது. இதுகுறித்த புகாரின் பேரில், மாநகராட்சி முன்னாள் ஆணையா் தினேஷ்குமாா் விசாரணைக்கு உத்தரவிட்டாா்.

விசாரணையில் ரூ. 150 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, 8 போ் கைது செய்யப்பட்டனா். இந்தப் புகாரில் திமுகவினா் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

வரி விதிப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அலுவலா்களைக் காப்பாற்றுவதற்கு ஆளுங்கட்சி நிா்வாகிகள் உதவி செய்கின்றனா். இந்தச் சம்பவம் குறித்து முதலில் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியது அதிமுகதான். ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பெயருக்கு மனு அளிக்கின்றனா்.

ஆணையா், உதவி ஆணையா், வரி வசூலிப்பவா் (பில் கலெக்டா்), வருவாய் உதவி ஆணையா் ஆகியோரின் கணினி ரகசிய குறியீட்டு எண் (பாஸ்வோ்ட்) திருடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவிகளின் கணவா்கள் அலுவலா்களை மிரட்டுகின்றனா். எனவே, மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அலுவலா்களையும் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க