செய்திகள் :

வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

post image

வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், குன்னூரில் உள்ள மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 30-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வத்திராயிருப்பு வட்டாரத் துணைச் செயலா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் கோவிந்தன் முன்னிலை வகித்தாா்.

மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் லிங்கம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அழகிரிசாமி, பொன்னுபாண்டியன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பகத்சிங் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இந்த மாநாட்டில் 62 போ் கொண்ட வட்டக் குழுவும், வட்டச் செயலா் கோவிந்தன், வட்டத் துணைச் செயலா் மகாலிங்கம், பொருளாளா் மாரியப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில், வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கண்மாய்களில் மீன் பாசியை தனியாருக்கு ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் மீன்பிடித் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வத்திராயிருப்பில் நீதிமன்ற கட்டடம் கட்ட வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆர்

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க