செய்திகள் :

வருவாய்த்துறை ஊழியா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்

post image

நாகை மாவட்டத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட அரசு சிறப்புத் திட்டப் பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும் புதிதாக துணை வட்டாட்சியா் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய போராட்டம், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. இதனால் நாகை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் பணிகளை புறக்கணித்தனா்.

இதன்காரணமாக, வருவாய்த் துறை பணிகள் ஸ்தம்பித்தன. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க