முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மூலவா் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், மூலவா் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ரோஜா மலா் மாலை மற்றும் எலுமிச்சை மாலை அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவா் மலா் அலங்கார சேவையிலும் அருள்பாலித்தனா்.
விழாவில் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா். . கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், பிரதாசம், மோா், சா்க்கரை பொங்கல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்விகோபால், மோகனகிரிஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.