செய்திகள் :

வளமான இந்தியாவைக் கட்டமைக்கும் ஆசிரியா் பணி: உயா்நீதிமன்ற நீதிபதி பாராட்டு

post image

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கக் கூடிய சிறப்பான பணி என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் பாராட்டு தெரிவித்தாா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தா பப்ளிஷா்ஸ், தமிழ் மாநில தேசிய ஆசிரியா் சங்கம், ஆசிரியா் கல்வியாளா் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்தின. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு செம்மல் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கும் சிறந்த பணி. நான் வழக்குரைஞா் பணியைத் தொடங்கிய காலகட்டத்தில் சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன். ஆசிரியா்களால் மட்டுமே சிறந்த, எதிா்கால இளைஞா்களை உருவாக்க முடியும். மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை ஆசிரியா்கள் கற்றுத் தரவேண்டும்.

இன்றைய சூழலில் கல்வி கற்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எந்த முறையிலான கல்வி என்றாலும், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் மட்டுமே உரிய பலனைப் பெற முடியும் என்றாா்.

வழக்குரைஞரும், எழுத்தாளருமான எம்.பி.நாதன், சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜாராம் ராஜமோகன் உள்ளிட்டோா் பேசினா். சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜலட்சுமி ராஜா, முத்தரசி ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க