செய்திகள் :

வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி

post image

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தி என்று மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அசாதாரணமான வரலாற்று சிறப்புமிக்க அனைத்தையும் உள்ளடக்கிய 2025-26 நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி. இந்த நிதிநிலை அறிக்கை, அனைவருடனும்அனைவரின்நலனுக்காகவும் என்ற உணர்வை உண்மையிலேயே பிரதிபலிக்கும் வகையிலும் ஒவ்வொரு குடிமகனை வளப்படுத்தி, அவர்களுக்கு தரமான சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையிலும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை எட்டுவதற்கான ஒரு உறுதியான பாதையை வகுக்கும் வகையிலும் உள்ளது.

ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை வலுப்படுத்துவதுடன் நமது மக்களின் தொழில்முனைவு ஆற்றலை வெளிப்படுத்துகிறது, இந்தியாவில் தயாரிப்போம் என்ற முன்முயற்சி மூலம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்துகிறது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்முனைவோரை வளர்ப்பது, ஜவுளி மற்றும் மீன்வளத் துறைகள் உள்பட நிலையான விரிவான வளர்ச்சியை இயக்குவதை நோக்கமாகக் கொண்டது.

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

இந்த நிதிநிலை அறிக்கை புதுமை, தொழில்நுட்பம், இணைப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது, கிராமப்புற-நகர்ப்புற பிளவுகளை இணைக்கிறது, எந்த குடிமகனும் பின்தங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. பாரதிய பாஷா புஸ்தக் திட்டம் மற்றும் டிஜிட்டல் அறிவுக் களஞ்சியம், நமது பூர்வீக ஞானத்தையும் தாய்மொழியையும் பாதுகாத்து ஊக்குவிக்கும், நமது பாரதிய அறிவு முறையை வளப்படுத்தும். காலநிலைக்கு ஏற்ற சீர்திருத்தங்களுக்கான உறுதியான அர்ப்பணிப்புடன், இந்த நிதிநிலை அறிக்கை, பொருளாதார வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது. இந்த நிதிநிலை அறிக்கை பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தியாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்: மார்க்சிய கம்யூனிஸ்ட் கண்டனம்!

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராம... மேலும் பார்க்க

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டு கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்... மேலும் பார்க்க

நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் இயங்கும்

தமிழகம் முழுவதும் நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25ம் நிதியாண்டில் கடந்த 05... மேலும் பார்க்க

மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட... மேலும் பார்க்க

இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?

இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்... மேலும் பார்க்க