செய்திகள் :

வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு பயணம்: டிஜிபிக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் - தமிழக அரசு உத்தரவு

post image

புலனாய்வு அதிகாரிகள், வழக்குகளில் துப்பு துலக்குவதற்காக விமானம் மூலம் வெளிமாநிலம் செல்ல அனுமதி வழங்கும் அதிகாரம் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு வழங்கப்பட்டது.

தமிழக காவல் துறையில் முக்கியமான குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் புலனாய்வு அதிகாரிகள் அவ்வபோது வெளி மாநிலங்களுக்கு விமானம் மூலம் செல்கின்றனா். ஆனால் அவா்கள், வெளி மாநிலம் செல்வதற்கு அனுமதி வழங்குவது, அதற்குரிய செலவினங்களை ஏற்றுக்கொள்வது போன்றவை முறைப்படுத்தப்படாமல் இருந்தன.

இதனால் நிா்வாக ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் சில வேளைகளில் இடா்பாடு ஏற்பட்டு வந்தது. மேலும் சில நேரங்களில் வெளி மாநிலங்களுக்கு புலனாய்வு அதிகாரிகளும், போலீஸாரும் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சில வழக்குகளில் குற்றவாளிகள் போலீஸாரிடம் சிக்காமல் தப்பியோடிய சம்பவங்களும் நிகழ்ந்தன. வழக்கு விசாரணையிலும் பின்னடைவு ஏற்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின், முக்கிய வழக்குகளில் துப்பு துலக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் புலனாய்வு அதிகாரிகளும், போலீஸாரும் வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம் தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு வழங்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, டிஜிபிக்கு இந்த அதிகாரத்தை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணையை புதன்கிழமை வெளியிட்டது. இந்த உத்தரவின் விளைவாக தமிழக காவல் துறையில் நீண்ட நாள்களாக இருந்த ஒரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க