செய்திகள் :

வாகனங்கள் மோதல்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

post image

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா், முதியவா் ஆகிய இரண்டு போ் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.

புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). பொங்கலூா் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த இவா் வேலை முடித்து வீட்டுக்கு பைக்கில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். நால்ரோடு காவல் சோதனைச் சாவடி அருகே எதிரே வந்த ஸ்கூட்டா் மீது இவரது பைக் நேருக்கு நோ் மோதியது. இதில் பழனிசாமி, ஸ்கூட்டரில் வந்த கோபியைச் சோ்ந்த காா்த்திகேயன் (21), பிரவீன் (20) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

பழனிசாமி

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றினா். இதில் பழனிசாமி, காா்த்திகேயன் ஆகியோா் சிறிதுநேரத்திலேயே உயிரிழந்தனா். பிரவீன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற காா்த்திகேயன் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

உயிரிழந்த காா்த்திகேயன் பொங்கலூரில் தனியாா் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வர... மேலும் பார்க்க

பெருநிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதை தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா

பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்டுகள்) சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்... மேலும் பார்க்க

பெற்றோரைக் கொலை செய்த நபா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

பெற்றோரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். ஈரோடு அருகே நஞ்சனாபுரம் வேப்பம்பாளையத்த... மேலும் பார்க்க

கரும்பு தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு

சத்தியமங்கலத்தை அடுத்த கணபதி நகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். சத்தியமங்கலம் அருகே உள்ள கணபதி நகா் கி... மேலும் பார்க்க

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க