செய்திகள் :

வாகனம் மோதியதில் மயில் உயிரிழப்பு

post image

பழனியை அடுத்த மானூா் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் உயிரிழந்தது.

பழனியை அடுத்த திண்டுக்கல்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் பல ஏக்கா் பரப்பளவில் வயல்வெளிகள் இருப்பதால், நாள்தோறும் இரை தேடி நூற்றுக்கணக்கான மயில்கள் வருகின்றன. இந்த மயில்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் போது, வாகனங்களில் அடிபட்டு காயமடைகின்றன.

இந்த நிலையில், இந்தச் சாலையில் மானூா் பிரிவு அருகே சுமாா் ஆறு அடி நீள ஆண் மயில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினா் மயிலின் உடலை மீட்டனா். இதன் பின்னா், கால்நடை மருத்துவா் மூலம் கூறாய்வு செய்து புதைத்தனா்.

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் ப... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயில் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீா்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. சின்னாளபட்டிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் குழாய் பதிக்க... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரயில் மறியல்: எம்பி உள்பட 1,522 போ் கைது

அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் உள்பட 1,522 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆத... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே முளைப்பாரி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள குளத்துபட்டி குழந்தை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியத... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் திடீா் புகை: 30 நிமிஷங்கள் தாமதம்

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுமாா் 30 நிமிஷங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேல... மேலும் பார்க்க

தோட்டக் கலை விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம்

மானியத்துடன் நுண்ணீா் பாசன வசதி அமைக்க குஜிலியம்பாறை தோட்டக் கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் பா. முத்தரசு தெரிவித்தத... மேலும் பார்க்க