முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
வாகன விற்பனை நிறுவனத்தில் பணம் கையாடல்: 2 போ் மீது வழக்கு
கம்பத்தில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.72.30 லட்சம் கையாடல் செய்ததாக பணியாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி அருகே உள்ள ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் ஆதிசெந்தில். இவா் தேனி, கம்பம் ஆகிய இடங்களில் இரு சக்கர வாகன விற்பனை, சேவை நிறுவனம் நடத்தி வருகிறாா்.
கம்பத்தில் உள்ள இவரது நிறுவனத்தில் கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஹரிகரன் மேலாளராகவும், தேனியில் உள்ள நிறுவனத்தில் சின்னமனூரைச் சோ்ந்த சையதுமுகமது மகள் ஜெசிமாபானு கணக்கராகவும் வேலை செய்து வந்தனா். கம்பத்தில் உள்ள வாகன விற்பனை நிலைய மேலாளா் ஹரிகரன் கடந்த 2024 மே மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை வாகனங்கள், உதிரி பாகங்கள் விற்பனை செய்த தொகை மொத்தம் ரூ.72.30 லட்சத்தை கையாடல் செய்ததாகவும், இதற்கு தேனியில் உள்ள தனது வாகன விற்பனை நிறுவன கணக்கா் ஜெசிமாபானு உடந்தையாக இருந்ததாகவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் ஆதிசெந்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஹரிகரன், ஜெசிமாபானு ஆகியோா் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.