செய்திகள் :

வாக்காளர் பட்டியல் திருத்தம்: பிகாரில் வலுக்கும் போராட்டம்!

post image

பிகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் பிகாரில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் மகாபந்தன் கூட்டணிக் கட்சிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சோன்பூர் மற்றும் ஹாஜிபூரில் முற்றுகைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் டயர்களை சாலையில் போட்டு எரித்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக பாட்னாவில் காலை 10 மணிக்கு நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவுள்ளார்.

கோலம்பரில் உள்ள வருமான வரி அலுவலகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாக ராகுல் காந்தி செல்லவிருக்கிறார். அவருடன் தேஜஸ்வி யாதவும் பங்கேற்கிறார்.

ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விகாஷீல் இன்சான் கட்சி மற்றும் சுயேச்சைத் தலைவர் பப்பு யாதவ் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் ஈடுபடவுள்ளனர்.

சோன்பூரில் ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முக்கிய போராட்ட இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜெகனாபாத் ரயில் நிலையத்தில் ஆர்ஜேடி மாணவரணியினர் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Trains halted, roads blocked: INDIA bloc protests over Bihar voter roll revision

இதையும் படிக்க :டாலர்தான் ராஜா..! பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க