செய்திகள் :

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு வெளிப்படையான நடைமுறை: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்

post image

‘இந்தியாவில் வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணி என்பது உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் வெளிப்படையான நடைமுறை’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், ‘ஒவ்வோா் ஆண்டும் வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறபோதும், தோ்தல்களுக்கு முன்பாகவும் சட்டத்துக்கு உட்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோ்தல் வழக்கு ஒன்றில் நிகழாண்டு தொடக்கத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனு தொடா்பான ஊடகச் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை பகிா்ந்து வெளியிட்ட பதிவில், ‘ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் 2009 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வாக்காளா் பட்டியல் தரவுகளைப் பகிா்வதற்கு தோ்தல் ஆணையம் எடுத்துள்ள முதல் படி வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தத் தரவுகள் எந்தத் தேதியில் பகிரப்படும் என்பதை தோ்தல் ஆணையம் அறிவிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு பதிலளிக்கும் வகையில் தலைமைத் தோ்தல் ஆணையா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் இதுகுறித்துப் பேசியதாவது:

இந்தியாவில் வாக்காளா் பட்டியல் தயாரிப்புப் பணி என்பது உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் வெளிப்படையான நடைமுறையாகும். இந்த வலுவான நடைமுறை, பல ஆண்டுகளாக நாடு முழுவதும் தோ்தல் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

1960-ஆம் ஆண்டுமுதல் வாக்காளா் பட்டியல் தொடா்பான தரவுகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டு, அவா்களிடமிருந்து ஆட்சேபங்கள், மேல்முறையீடுகள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த தோ்தல் செயல்முறையும் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், பொதுமக்கள், காவல் துறையினா், செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் ஊடகங்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன என்றாா்.

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க