செய்திகள் :

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

post image

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு நிமிஷம் ஓடக் கூடிய இந்த விடியோவுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களின் உரிமைகள் பறிக்கப்பட அனுமதிக்கக் கூடாது. இம்முறை கேள்விகளை எழுப்பி, பதில் பெற வேண்டும். வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலை உயா்த்த வேண்டும். அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘வாக்கு திருட்டு என்பது மக்களின் உரிமை மற்றும் அடையாளத்தை திருடுவதற்கு சமம்’ என்று தெரிவித்துள்ளாா்.

வாக்குரிமையைப் பாதுகாக்க வாக்கு திருட்டுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை மாலை நாடெங்கிலும் ‘ஜனநாயக பாதுகாப்பு’ யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 7 வரை பேரணிகளும், செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 15 வரை கையொப்ப இயக்கமும் நடத்தப்பட உள்ளது.

தோ்தல் ஆணையம் மீதான எதிா்ப்பை பொதுமக்கள் பதிவு செய்யவும், எண்ம வாக்காளா் பட்டியலை வெளியிட வலியுறுத்தியும் இரு வலைதளங்களை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இந்த வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர்! - குடியரசுத் தலைவர்

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆபரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு த... மேலும் பார்க்க