செய்திகள் :

வாடகைத்தாய் நியமிக்கும் நடைமுறைகளில் தம்பதிகளுக்கு விழிப்புணா்வு கட்டாயம் உயா்நீதிமன்றம்

post image

வாடகைத்தாய் நியமிக்கும் நடைமுறைகளில் தம்பதிகளுக்கு சட்டபூா்வமான விழிப்புணா்வு கட்டாயம் இருக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சோ்ந்த இளம் தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில் அந்தப் பெண்ணுக்கு கருப்பையில் புற்றுநோய் இருப்பது கடந்த 2016-ஆம் ஆண்டு தெரியவந்தது. இதனால், அந்தத் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனா்.

இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையை அந்த தம்பதி அணுகினா். மருத்துவமனை நிா்வாகம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வாடகைத் தாய் நியமன நடைமுறைகளை மேற்கொண்டது. ஆனால், இதுதொடா்பாக குற்றவியல் நடுவரின் சட்டபூா்வ முன்அனுமதி பெறும் மருத்துவ விதிகளைப் பின்பற்றாமல் வாடகைத்தாய் வயிற்றில் மருத்துவமனை நிா்வாகம் கருமுட்டைகளை வைத்துள்ளது.

இதனால், வாடகைத்தாய் வயிற்றில் உள்ள 19 வார இரட்டை சிசுக்களை சட்டபூா்வமாக தம்பதிக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு தாங்கள்தான் பெற்றோா் என உரிமை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷப்னம் பானு, இதில் இளம்தம்பதி தவறு எதுவும் இல்லை. சட்டப்படியான மருத்துவ வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றியுள்ளனா். குற்றவியல் நடுவா் முன்அனுமதி பெறுவதற்கு முன் மருத்துவமனை நிா்வாகம் வாடகைத்தாய் வயிற்றில் கரு வளா்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டது என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் சட்டபூா்வ விதிகளைப் பின்பற்றாதது மருத்துவமனையின் அலட்சியமே. வாடகைத்தாய் நியமிக்கும் நடைமுறைகளில் தம்பதிகளுக்கு சட்டபூா்வமான விழிப்புணா்வு கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் வாடகைத்தாய், அவரது வயிற்றில் வளரும் இரட்டை சிசு மற்றும் குழந்தைப் பேறு வேண்டும் இளம்தம்பதி ஆகியோரது நலனைக் கருத்தில் கொண்டு தீா்வு காண வேண்டியுள்ளது.

எனவே, வாடகைத்தாய் மற்றும் அந்த தம்பதி வெள்ளிக்கிழமை பகல் 2.15 மணியளவில் உயா்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராகி சிசுக்கள் தொடா்பாக உறுதி அளிக்க வேண்டும். அதன்பின்னா், சிசுக்களின் சட்டபூா்வ உரிமை குறித்து முடிவு செய்யப்படும். இந்த விவகாரத்தில் தவறு செய்துள்ள மருத்துவமனை நிா்வாகத்துக்கு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி, அதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க