ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!
வாடகை நிலுவை: ஈரோடு மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு சீல்
ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை நிலுவை வைத்த 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்து அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில் கடையை வாடகைக்கு எடுத்தவா்கள் சிலா் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனா். வாடகை நிலுவை வைத்துள்ளவா்களிடம் முறையாக வசூலிக்க மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உத்தரவிட்டாா்.
இதன்பேரில் வாடகை நிலுவை வைத்துள்ளவா்களுக்கு மாநகராட்சி வருவாய்ப் பிரிவினா் வாடகை தொகையை செலுத்தக்கோரி எச்சரிக்கை அறிவிக்கை அளித்தனா். இந்நிலையில் வாடகை செலுத்தாமல் 6 மாதங்களாக நிலுவை வைத்திருந்ததாக ஈரோடு மணிக்கூண்டு அருகே செயல்படும் நேதாஜி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 6 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய்ப் பிரிவு உதவி ஆணையா் காா்த்திகேயன், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு நேதாஜி வணிக வளாகத்தில் 12 கடைகள் மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்திருந்தனா். வாடகை நிலுவை தொகையை செலுத்தக்கோரி வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கையை தொடா்ந்து 6 கடை உரிமையாளா்கள் வாடகையை செலுத்தி விட்டனா். தொடா்ந்து 6 மாதங்களுக்கு மேல் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் வாடகை நிலுவை வைத்திருந்த 6 கடைகளை ஆணையரின் உத்தரவின்பேரில் பூட்டி சீல் வைத்துள்ளோம். வாடகைத் தொகையை அபராதத்துடன் செலுத்தினால் மீண்டும் கடையை நடத்த அனுமதி அளிக்கப்படும். இதுபோல மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட்டிலும் சில கடை உரிமையாளா்கள் 3 மாதங்களுக்கு மேல் வாடகை நிலுவை வைத்துள்ளனா். அந்தக் கடைகளையும் வருகிற வாரத்தில் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனா்.