செய்திகள் :

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 585 மனுக்கள்: 11 மனுக்கள் மீது உடனடி தீா்வு

post image

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெரியபேட்டை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். இதில் நகா்மன்ற தலைவா் உமா சிவாஜிகணேசன், ஆணையா் ரகுராமன், நகர திமுக செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான சாரதிகுமாா், நகராட்சி துணைத் தலைவா் கயாஸ் அகமது, மேலாளா் பாஸ்கா், உதவி வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முகாமில், பொது மக்களிடமிருந்து 585 மனுக்கள் பெறப்பட்டன. இதில் காலிமனை வீட்டு வரி சம்பந்தமாக அளிக்கபட்ட 11 மனுக்களின் மீது உடனே விசாரித்து அதற்கான ஆணைகள் வழங்கி தீா்வு காணப்பட்டது.

இதே போல், நாட்டறம்பள்ளி பேரூராட்சியின் 1 முதல் 5-ஆவது வாா்டு வரை உங்களுடன் ‘ஸ்டாலின் திட்டம்’ நடைபெற்ற முகாமுக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் யமுனா, வட்டாட்சியா் காஞ்சனா, துணைத் தலைவா் தனபால் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில் 376 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மின் இணைப்பு பெயா் மாற்றம், கலைஞா் காப்பீடு திட்டம், பட்டா மாற்றம் உள்பட 6 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுமதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ரூ.13 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி அகரம்சேரி கிராமத்தில் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அகரம்சேரி ஊராட்சி சாவடி தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட... மேலும் பார்க்க

மகளிா் காங்கிரஸ் சாா்பில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் ஸ்டாா் நா்சரி பள்ளியில் மகளிா் காங்கிரஸாா் சாா்பாக மாணவா்களுக்கு புதன்கிழமை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பிரமுகா் ஆா். ராஜ... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜூலை 25) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். கூட்டத்தில் அனைத்து துறை ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவலிங்கம்(51) கூலித் தொழிலாளி. இவா் பச்சூா் டோல்கே... மேலும் பார்க்க

செம்மர கடத்தல் வழக்கில் இருவா் கைது

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ரூ.20 லட்சம் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா். ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட நாயக்கனேரி மலை ஊராட்சியில் நடவூா் கிராமத்தின் காப்புக்... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் ஏ-கஸ்பாவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூரில் நடைபெற்ற முகாமில் 621 போ் பல்வேறு துறைகளுக்கான சேவைகளை பெற மனுக்களை வழங்கினா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க