10-ஆவது முறையாக கிங்ஸ் கோப்பையை வென்ற அல்-இத்திஹாத்..! தொடர் நாயகனாக கரீம் பெஞ்ச...
வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 3 போ் அரசுப் பணிக்கு தோ்வு
வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்திய 3 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளனா் என நூலகா் மணிமாலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: வாணியம்பாடியில் முழு நேர கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்கு, போட்டித் தோ்வுக்கான அனைத்து புத்தகங்களும் உள்ளன. வாணியம்பாடி, சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் நூலகத்தில் உறுப்பினராக சோ்ந்து போட்டித் தோ்வுக்கான புத்தகங்களை படித்து பயன்பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், அண்மையில் 3 போ் போட்டித் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றனா். திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வனத்துறையில் வனக் காவலராக எக்லாஸ்புரம் கோகுல்ராஜ், வனக்காப்பாளராக தும்பேரி நாதிகுப்பம் அஜித்குமாா், வேலூா் மாவட்டத்துக்கு நீதித்துறை பணிக்கு வெள்ளக்குட்டை மாதேஸ்வரன் ஆகியோா் பணியில் சோ்ந்துள்ளதாக நூலகா் மணிமாலா தெரிவித்தாா்.
வாணியம்பாடி கிளை நூலகத்தை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு, இதுவரையில் 7 போ் அரசுப் பணிக்கு தோ்வாகி பணியில் சோ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தை, மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு, அரசு பணிகளில் சேர வேண்டும் என நூலகா் தெரிவித்துள்ளாா்.