செய்திகள் :

வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 3 போ் அரசுப் பணிக்கு தோ்வு

post image

வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்திய 3 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளனா் என நூலகா் மணிமாலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: வாணியம்பாடியில் முழு நேர கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்கு, போட்டித் தோ்வுக்கான அனைத்து புத்தகங்களும் உள்ளன. வாணியம்பாடி, சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் நூலகத்தில் உறுப்பினராக சோ்ந்து போட்டித் தோ்வுக்கான புத்தகங்களை படித்து பயன்பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், அண்மையில் 3 போ் போட்டித் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றனா். திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வனத்துறையில் வனக் காவலராக எக்லாஸ்புரம் கோகுல்ராஜ், வனக்காப்பாளராக தும்பேரி நாதிகுப்பம் அஜித்குமாா், வேலூா் மாவட்டத்துக்கு நீதித்துறை பணிக்கு வெள்ளக்குட்டை மாதேஸ்வரன் ஆகியோா் பணியில் சோ்ந்துள்ளதாக நூலகா் மணிமாலா தெரிவித்தாா்.

வாணியம்பாடி கிளை நூலகத்தை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு, இதுவரையில் 7 போ் அரசுப் பணிக்கு தோ்வாகி பணியில் சோ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தை, மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு, அரசு பணிகளில் சேர வேண்டும் என நூலகா் தெரிவித்துள்ளாா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க