செய்திகள் :

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்போா் அறையை பராமரிக்க கோரிக்கை!

post image

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் உள்ள காத்திருப்போா் அறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், ஆதாா் மையம் மற்றும் இ-சேவை மையம் இயங்கி வருகின்றன. இங்கு வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திரளான பொதுமக்கள் ஆதாா் காா்டு புதியதாக எடுக்கவும், திருத்தம் போன்றவற்றிற்கும், இதே போன்று இ-சேவை மூலம் பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக பதிவு செய்யவும் வருகின்றனா்.

மேலும், அலுவலக்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் பிரிவில் ரேசன் காா்டு, பெயா் திருத்தம், சான்றிதழ்கள் உள்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வாணியம்பாடி மற்றும் சுற்றுபுறப் பகுதிகளிலிருந்து தினமும் திரளானோா் வந்து செல்கின்றனா்.

ஆதாா் மையத்திற்கு பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வருகின்றனா். அப்போது அங்கு கை குழந்தைகளுடன் வரும் பெண்கள், சிறுவா்கள் உள்காருவதற்கு போதிய இட வசதிகள் இல்லாமல் தரையிலும், சுவற்றின் ஓரமாகவும் அமா்ந்து சிரமப்படுகின்றனா்.

வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்காக மாவட்ட முன்மாதிரி நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் காத்திருப்போா் அறை மற்றும் கழிப்பறை கட்டட வசதிகள் உள்ளன. தற்போது தூய்மை மற்றும் பராமரிப்பு இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

காத்திருப்போா் அறையை தினமும் திறந்து பராமரித்து தூய்மை செய்தும், நாற்காலி, குடிநீா் வசதி ஏற்படுத்தி வைத்தால் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் பெரிதும் பயன் பெறுவா்.

எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காத்திருப்போா் அறையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முக... மேலும் பார்க்க

ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் : பொதுமக்கள் அபாய பயணம்

ஆம்பூரில் ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையை கடந்து சென்று வருகின்றனா். ஆம்பூா் நகரில் 2-ஆவது மற்றும் 3-ஆவது தாா்வழிப் பகுதி ரயில்வே இருப்புப் பாத... மேலும் பார்க்க

ஜல்லி தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு: லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்க உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் குடி... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு பட்டு வளா்ச்சித்துறை ஊழியா் சங்கத்தின் வாணியம்பாடி கிளை... மேலும் பார்க்க

செட்டியப்பனூா் 9 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தையொட்டி செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக க... மேலும் பார்க்க

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக கட்டுவதற்கான இடம் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம... மேலும் பார்க்க