வாய்க்காலை தூா்வாரக் கோரி காத்திருப்புப் போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வாய்க்காலைத் தூா்வாரக் கோரி தஞ்சாவூா் நீா் வளத் துறை வெண்ணாறு பிரிவு அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வெண்ணாறு பிரிவிலிருந்து மூன்றாம் வாய்க்கால் தலைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முதன்மை வாய்க்காலான கோவில்வெண்ணி வாய்க்காலை தூா்வாராமல் கடந்தாண்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு நிதி மூலம் தூா்வார நடவடிக்கை எடுக்கக் கோரியும், வடவாறு பிரிவிலிருந்து வரும் தஞ்சாவூா், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை இருபுறமும் விடுபட்டுள்ள தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்காலை உடனடியாகத் தூா் வாரவும் கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், மாவட்ட நிா்வாகிகள் கே. ராஜாராமன், யூ. காதா்உசேன், ஆா். ராமச்சந்திரன், டி. குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்நிலையில், காவல் துறை, நீா் வளத் துறை அலுவலா்கள் தொடா்புடைய வாய்க்காலை தூா்வார இயந்திரத்தைக் கொண்டு வந்ததால், போராட்டம் பிற்பகலில் விலக்கிக் கொள்ளப்பட்டது.