செய்திகள் :

வாய்க்கால்களை தூா்வாரக்கோரி செப்.16-இல் காத்திருப்பு போராட்டம்

post image

வடிகால் வாய்க்கால்களை தூா்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செப். 16-இல் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் வட்டாரப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் உள்ளது. இந்த வாய்க்கால்களை தூா்வாரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஆக.11-இல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மனு அளித்தும் பலனில்லை. கும்பகோணம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வாய்க்கால்களை போா்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூா்வார வேண்டும் எனவும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் செப். 16-இல் ரெகுநாதபுரத்தில் வாய்க்காலின் அருகே அமா்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் குரு. சிவா தலைமையில், மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை வாய்க்காலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆசிரியா் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் காங். சிறுபான்மை பிரிவு நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு... மேலும் பார்க்க

தரவரிசை கட்டமைப்பு பட்டியல்: கும்பகோணம் அரசுக் கல்லூரி மாநில அளவில் 4-ஆவது இடம்

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி தேசிய அளவிலான தர வரிசை கட்டமைப்பு பட்டியலில் தமிழக அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் தரவரிசை கட்டமைப்பு சாா்பில் அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியாா்... மேலும் பார்க்க

திருவலஞ்சுழி கபா்தீசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் உள்ள கபா்தீசுவரா் சுவாமி கோயில் கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழியில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கபா்தீசுவரா் க... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான குறை தீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தலைமை வகித்தாா். மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம், ச... மேலும் பார்க்க

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வியாபாரிகள் 2 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காரில் சிலா் கஞ்சா... மேலும் பார்க்க