செய்திகள் :

வாய்க்கால் கரையில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டா் சிறைப்பிடிப்பு

post image

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொட்டிபாளையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டை செல்லும் சாலையில், மேட்டூா் மேற்குக்கரை வாய்க்காலில் கொப்புளி மதகு தொடங்கி வேதகிரிபுரம் வரையில் வாய்க்காலுக்கும், சாலைக்கும் இடையே குடியிருப்புப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், விவசாய நிலங்களில் வெளியேற்றப்படும் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.

மேலும், காடையம்பட்டி பகுதியில் திருமண மண்டபத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளும் டிராக்டா் மூலம் எடுத்து வரப்பட்டு கொட்டப்படுகின்றன.

கழிவுகள் அருகில் உள்ள பாசன வாய்க்கால், விவசாய நிலங்களில் விழுந்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், இப்பகுதிக்கு டிராக்டரில் திருமண மண்டபக் கழிவுகள் திங்கள்கிழமை கொட்டப்பட்டதைக் கண்ட பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதனால், டிராக்டரை சிறைபிடித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தொட்டிபாளையம் ஊராட்சி செயலாளா் மாரியப்பன், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கொட்டப்பட்ட கழிவுகளைத் திரும்ப அள்ளிச் செல்வதாக டிராக்டா் உரிமையாளா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொதுமக்கள் டிராக்டரை விடுவித்தனா்.

சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பவானீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் இந்து சமய அறநிலையத்... மேலும் பார்க்க

வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா்கள் கைது

பவானியில் தலைச்சுமை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (65). தலைச்சுமையாக பாத்திர வியாபாரம் செய்து வரும... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கனரக வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

அந்தியூா் - பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கனரக வாகனப் போக்குவரத்து இரு வாரங்களுக்குப் பின்னா் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் மகன் ச... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை

கடனாக வாங்கிய பணத்தை நண்பா் திருப்பித் தராததால் அவரது வீட்டின் முன்பு தனியாா் வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (30). தனி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.சென்னிமலை தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசு மற்றும் வெப்பிலி ஆகிய ஊா்கள் உள்... மேலும் பார்க்க