செய்திகள் :

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை

post image

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சென்னிமலை தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசு மற்றும் வெப்பிலி ஆகிய ஊா்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்து ஆடு, கன்றுக்குட்டி மற்றும் நாய்களை கடித்துக் கொன்று வரும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் வனத் துறை சாா்பில் சிறுத்தையை உயிருடன் பிடிக்கக் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். கடந்த வாரம் வெப்பிலி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வீட்டுக்கு முன்பு கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்றது.

இந்த நிலையில், சில்லாங்காட்டுவலசு குழுவக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி செல்லக்குட்டி (70) என்பவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல கால்நடைகளையும் நாயையும் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டாா்.

பின்னா், திங்கள்கிழமை காலையில் செல்லக்குட்டி தனது தோட்டத்துக்கு சென்று பாா்த்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்று தின்று விட்டு பாதி உடலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சென்னிமலை வனத் துறையினருக்கு செல்லக்குட்டி தகவல் கொடுத்தாா். வனத் துறை ஊழியா்கள் அங்கு சென்று பாதி உடலுடன் கிடந்த நாயைப் பாா்வையிட்டனா்.

இதுவரை வனப் பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் கட்டி வைத்திருந்த கால்நடைகள் மற்றும் நாயை சிறுத்தை கடித்துக் கொன்றது. தற்போது, வனப் பகுதியைத் தாண்டி போக்குவரத்து அதிகம் உள்ள தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்து நாயைக் கடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பவானீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் இந்து சமய அறநிலையத்... மேலும் பார்க்க

வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா்கள் கைது

பவானியில் தலைச்சுமை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (65). தலைச்சுமையாக பாத்திர வியாபாரம் செய்து வரும... மேலும் பார்க்க

வாய்க்கால் கரையில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டா் சிறைப்பிடிப்பு

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொட்டிபாளையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டை செல்லும் சாலையில், மேட்டூா்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கனரக வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

அந்தியூா் - பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கனரக வாகனப் போக்குவரத்து இரு வாரங்களுக்குப் பின்னா் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் மகன் ச... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை

கடனாக வாங்கிய பணத்தை நண்பா் திருப்பித் தராததால் அவரது வீட்டின் முன்பு தனியாா் வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (30). தனி... மேலும் பார்க்க