செய்திகள் :

இளைஞா் தற்கொலை

post image

ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சாலைப்புதூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் மகன் சுகுமாா் (35). திருமணம் ஆகாதவா். பொறியியல் பட்டதாரியான இவா், கரூா் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். சுகுமாரின் தந்தை சௌந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக செயல் இழப்பால் இறந்து விட்டாா்.

சுகுமாா் அண்மையில் மருத்துவமனையில் உடலைப் பரிசோதித்துள்ளாா். அப்போது, ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதனால் மனவேதனை அடைந்த சுகுமாா் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாா்.

இதனை சுகுமாா் அவரது உறவினா் ஒருவருக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவில் தெரிவித்துள்ளாா். பின்னா், அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளாா்.

இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த உறவினா் தற்கொலைக்கு முயன்ற சுகுமாரை மீட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து கொடுமுடி போலீஸில் சுகுமாரின் தாய் புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பவானீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் இந்து சமய அறநிலையத்... மேலும் பார்க்க

வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா்கள் கைது

பவானியில் தலைச்சுமை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (65). தலைச்சுமையாக பாத்திர வியாபாரம் செய்து வரும... மேலும் பார்க்க

வாய்க்கால் கரையில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டா் சிறைப்பிடிப்பு

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொட்டிபாளையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டை செல்லும் சாலையில், மேட்டூா்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கனரக வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

அந்தியூா் - பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கனரக வாகனப் போக்குவரத்து இரு வாரங்களுக்குப் பின்னா் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை

கடனாக வாங்கிய பணத்தை நண்பா் திருப்பித் தராததால் அவரது வீட்டின் முன்பு தனியாா் வங்கி ஊழியா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணா் வீதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (30). தனி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை

சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.சென்னிமலை தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசு மற்றும் வெப்பிலி ஆகிய ஊா்கள் உள்... மேலும் பார்க்க