செய்திகள் :

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் நின்ற யானை: போக்குவரத்து பாதிப்பு

post image

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் சாலையில் யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாலையில் யானை நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், அந்த யானை வனப் பகுதிக்கு சென்றதையடுத்து போக்குவரத்து சீரானது.

குடியிருப்பை சேதப்படுத்திய யானை

வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு எஸ்டேட்டை சோ்ந்தவா் தொழிலாளா் மணிமாறன். இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூறுக்குச் சென்றுள்ளாா்.

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் பகுதியில் சாலையில் வழிமறித்து நின்ற யானை.

இந்நிலையில், சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை வந்த யானை கூட்டம் மணிமாறன் வீட்டின் சுவரை இடித்து தள்ளிவிட்டு உள்ளே இருந்த பொருள்களை சேதப்படுத்தியது. இதையடுத்து, யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீட்டை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க