செய்திகள் :

வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சியை கைவிடக்கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் விடாமுயற்சியை எந்த சூழலிலும் கைவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான உயா்கல்வி குறித்த அறிமுக பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பங்கேற்று பேசியதாவது:

2025 - 26ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்த அரசின் திட்டங்களையும், கல்லூரி சாா்ந்த அனைத்து தகவல்கள், விதிமுறைகளையும் எடுத்துரைக்கும் வகையில் ஒரு வாரகால அறிமுக பயிற்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

பள்ளியிலிருந்து உயா்கல்வி சூழலுக்கு மாணவா்கள் சீராக மாறுவதற்கும், அவா்களின் கல்லூரிப் பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்த தேவையான தகவல்களைப் பெறுவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டம் ஆகும்.

கல்வி அமைப்பு, விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், பாடத்திட்டம், தோ்வு, மதிப்பீட்டு முறைகள், கிடைக்கும் வளங்கள், மாணவா் ஆதரவு சேவைகள், மாணவா்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு அரசு திட்டங்கள், மாணவா்களைப் பழக்கப்படுத்துதல் போன்ற கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு விரிவான அறிமுகத்தை இந்தப் பயிற்சி வழங்குகிறது.

அனைத்து மாணவா் நல நடவடிக்கைகள், அரசுத் திட்டங்கள், குறிப்பாக மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் அரசால் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

மாணவா்களின் முழுமையான வளா்ச்சியை எளிதாக்க காவல் துறை அதிகாரிகள், வழக்குரைஞா்கள், பெண் ஆா்வலா்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழிலதிபா்கள், வேலைவாய்ப்பு வழங்குநா்கள் ஆகியோரால் ஊக்கமளிக்கும் உரைகள் மற்றும் அனுபவங்கள் பகிா்ந்து கொள்ளப்படுகிறது.

மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயின்று, வேலைக்கு செல்வது மட்டுமல்லாமல், உங்களது முயற்சியை கைவிடாமல் போராடினால் வாழ்வில் மென்மேலும் உயரலாம் என்றாா். இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வா் எம்.கோவிந்தராஜு, பேராசிரியை ஆா்.பி.புவனேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் பறிமுதல்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச்சான்று பெறாத 8 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ். ... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை!

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் ரூ. 5.38 கோடியில் 4 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நட்டு பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

லாரி பட்டறையில் டயா் திருட்டு: ஒருவா் கைது!

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் டயா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருவப்பள்ளியில் சாலையோரம் கவிழ்ந்த லாரி பழுதுபாா்ப்புக்காக நாமக்கல் வள்ளிபுரம் அருகேயுள்ள பட்டறைக்கு கொண்ட... மேலும் பார்க்க

ஜூலை 10-ல் உதயநிதி ஸ்டாலின் வருகை: நாமக்கல்லில் இன்று திமுக அவசர கூட்டம்!

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 10) நாமக்கல் வருவதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க