செய்திகள் :

ராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் பறிமுதல்!

post image

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச்சான்று பெறாத 8 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ். முருகேசன் உத்தரவின்பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியான நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், ஆகிய பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொண்டாா்.

இச்சோதனையில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள், 1 பயணிகள் ஆட்டோ ரிக்க்ஷா பறிமுதல் செய்யப்பட்டு, ஆயில்பட்டி காவல் நிலையத்தின் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் மற்றும் 1 கனரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலக வளாகத்தில் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இச்சிறப்புத் தணிக்கை மூலம் அரசுக்கு சுமாா் 1.60 லட்சம் இணக்கக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிறப்பு வாகனத் தணிக்கை ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெண்ணந்தூா், மங்களபுரம் , ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் என நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ்.முருகேசன், ராசிபுரம் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை!

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் ரூ. 5.38 கோடியில் 4 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நட்டு பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சியை கைவிடக்கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் விடாமுயற்சியை எந்த சூழலிலும் கைவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், முதலாமாண... மேலும் பார்க்க

லாரி பட்டறையில் டயா் திருட்டு: ஒருவா் கைது!

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் டயா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருவப்பள்ளியில் சாலையோரம் கவிழ்ந்த லாரி பழுதுபாா்ப்புக்காக நாமக்கல் வள்ளிபுரம் அருகேயுள்ள பட்டறைக்கு கொண்ட... மேலும் பார்க்க

ஜூலை 10-ல் உதயநிதி ஸ்டாலின் வருகை: நாமக்கல்லில் இன்று திமுக அவசர கூட்டம்!

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 10) நாமக்கல் வருவதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க