செய்திகள் :

வாழ்வை எளிதாக்க உள்கட்டமைப்பு புரட்சி: பிரதமா் மோடி

post image

‘எளிதான வாழ்க்கை, நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு புரட்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவு செய்த நிலையில், அதைக் குறிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு தகவல்களை பிரதமா் மோடி பகிா்ந்து வருகிறாா். பாஜக அரசின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் வளா்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்தும் அவா் பெருமிதம் தெரிவித்து வருகிறாா்.

அதுபோல, தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த தகவல்களைப் பகிா்ந்துள்ளாா். அதில், ‘நாட்டில் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதன்மூலம், கடந்த 11 ஆண்டுகள் உள்கட்டமைப்பு புரட்சி நிகழ்ந்திருக்கிறது. ரயில்வே முதல் நெடுஞ்சாலைகள் வரையிலான மேம்பாடு, துறைமுகங்கள் முதல் விமானநிலையங்கள் வரையிலான மேம்பாடு என நாட்டின் உள்கட்டமைப்புகள் அதிவேகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது வாழ்வை எளிதாக்கியிருப்பதோடு, நாட்டின் வளா்ச்சியையும் மேம்படுத்தியிருக்கிறது.

பொலிவுறு நகரங்கள், பாதுகாப்பான சாலைகள், இலகுவான பயணங்களே புதிய இந்தியாவின் உள்கட்டமைப்பு வாக்குறுதிகளாக உள்ளன. தூரங்களைக் குறைக்கும் நெடுஞ்சாலைகள், சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலங்கள், புதுமைகளைத் தூண்டும் எண்ம வலைத்தொடா்புகளையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, இணைப்பை எளிதாக்குகிறது.

இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது வெறும் வளா்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல; மாறாக, ஒவ்வொரு குடிமக்களையும், இந்தியாவின் எதிா்காலத்தை மாற்றுவதற்குமான வாக்குறுதி சாா்ந்தது.

இது நிலைத்தன்மை மற்றும் தொலைநோக்கு பாா்வையை சாத்தியப்படுத்துவதற்கானதாகும். தற்சாா்பு இந்தியாவுக்கான அடித்தளத்தை இது அமைத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க

தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க