செய்திகள் :

விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.

இக்கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகனான அஜித்குமார் (வயது 27) காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முந்தினம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமியும் அவர் மகள் நிகிதாவும் கோயிலுக்கு வந்துள்ளனர்.

அஜித்குமார்

காரில் வந்த சிவகாமிக்கு நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் சக்கர நாற்காலி எடுத்து வந்து உதவியுள்ளார். அப்போது நிகிதா, காரை ஓரமாக பார்க்கிங் செய்யும்படி அஜித்குமாரிடம் தெரிவிக்க, தனக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கூறி, அங்கிருந்த வேறொருவரிடம் காரை பார்க்கிங் செய்யச் சொல்லுங்கள் என்று அஜித்குமார் கூறியுள்ளார்.

கோயிலில் வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறியபோது, பின் சீட்டில் பெட்டியில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகையை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே அஜித்குமாரிடம் கேட்க, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூற உடனே திருப்புவனம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அஜித்குமார் உள்ளிட்ட சிலரை பிடித்த போலீசார் திருப்புவனம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். பின்பு அஜித்குமாரை வெளியே அனுப்ப, தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அஜித்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட அஜித்குமார் உறவினர்கள்

இதையடுத்து, அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தவர்கள் பின்பு மதுரைக்கு கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் தெரிந்து அஜித்குமாரின் உறவினர்கள் திருப்புவனம் காவல்நிலையம் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவில் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அஜித்குமாரின் உறவினர்கள் கூறும்போது, "கோயிலில் அஜித்குமார் காரில் வந்த குடும்பத்திற்கு உதவியுள்ளான். இந்நிலையில் நகை காணவில்லை எனக் கூறி அஜித்குமார், அவன் தம்பி உள்பட 5 பேரை போலீசார் பிடித்து கடுமையாக அடித்து விசாரணை செய்துள்ளனர். அடி தாங்கமுடியாமல் அஜித் உயிரை விட்டுள்ளான். போலீஸ் அடித்ததில் உயிரிழந்தவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர்.

இந்த நிலையில் இதற்கு காரணமான 6 போலீசாரை சிவகங்கை எஸ்.பி சஸ்பெண்ட் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்... மேலும் பார்க்க

Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்தி... மேலும் பார்க்க

`தலைமறைவான ஜெகன் மூர்த்தி?' - தனிப்படை அமைத்த சிபிசிஐடி! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டி தாக்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பார... மேலும் பார்க்க

`கச்சத்தீவு மீட்பு மாநாடு' நடத்தி விட்டு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்.. கடலில் சிறை பிடித்த இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற போதும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு... மேலும் பார்க்க

Puri stampede: பூரி ஜெகன்நாதர் கோயில்: ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி; 50 பேர் காயம்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை மிகவும் பிரபலம். இந்த ரதயாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு. இந்த ரதயாத்திரையின் போது பூரி நகரம... மேலும் பார்க்க

மரத்தில் தொங்கிய உடல்; கொலையா?தற்கொலையா? கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகள்; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளியான முருகனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையி... மேலும் பார்க்க