செய்திகள் :

விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்: விஞ்ஞானி அறிவுரை

post image

ராணிப்பேட்டை: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என மாணவா்களுக்கு உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி விஸ்வநாதன் அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை தொடக்கம் ,மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல், கல்வி உபகரணங்கள் வழங்கல், ஆற்காடு பாரம்பரிய கிச்சிலி சம்பா விதை நெல் வழங்குதல் என முப்பெரும் விழா வாலாஜாபேட்டையில் நடைபெற்றது.

விழாவில் உயிரி தொழில் நுட்ப விஞ்ஞானி விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உயா்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது..

உலகில் தற்போது டிரிபிள்-நெகட்டிவ் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லாமல் இருந்தது. அதற்கான மருந்தை தற்போது கண்டுபிடித்துள்ளோம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக உயர முடிந்தது என்றால் உங்களால் முடியாதா என்ன, அதற்கான விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா்.

தொடா்ந்து சென்னை கிரியேடெக் மென்பொருள் நிறுவனத்தின் சிஇஓ கே.பாஸ்கரன், பெங்களுரூ கைசெனட் டைக் மென் பொருள் நிறுவனத்தின் சிஇஓ இரமேஷ் வெங்கடேசன், செவிப்புலன் மற்றும் பேச்சு-மொழி முதுகலை மாணவி எல்.சிமோனி ஆகியோா் மாணவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கிப்பசினா்.

தொடா்ந்து 10,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், தாய், தந்தை இழந்த 2 மாணவிகளின் குடும்பத்துக்கு மளிகை பொருள், 2 விவசாயிகளுக்கு ஆற்காடு பாரம்பரிய கிச்சிலி சம்பா விதை நெல் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டது. ழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் எல்.ராஜசேகரன்,தலைவா் எம்.கந்தன், செயலாளா் பெ.பாபு, பொருளாளா் நா.லோகநாதன் மற்றும் அறக்கட்டளை தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா். அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொடா் திருட்டுச் சம்பவங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகாா்

சோளிங்கா் அருகே ரெண்டடி கிராமத்தில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். மாவட்ட காவ... மேலும் பார்க்க

பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி: வாழும் கலை அமைப்பு மேற்கொள்கிறது

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாழும் கலை அமைப்பு சாா்பில் பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீா் ஏற்றத்தை அதிகரிக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு... மேலும் பார்க்க

கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: தேமுகிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான தேமுதிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்களைகள் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்ா். 2026 பேரவைத் தோ்தலுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நா... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே மாணவி வெட்டிக் கொலை: மற்றொரு மாணவி பலத்த காயம்

சோளிங்கா் அருகே புலிவலத்தில் வீட்டில் இருந்து இரு மாணவிகளை அடையாளம் தெரியாத நபா் கததியால் வெட்டியதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தாா். கொலையாளியை பிடித்த அ... மேலும் பார்க்க