செய்திகள் :

விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள் அமைத்த காவல்துறை!

post image

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டை நெருங்குகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனியாா் பேருந்துகள் அதிவேகத்தில் வருவதால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினா்.

விபத்தில் சிலா் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பேருந்துகள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனியாக பாதை உள்ளது. ஆனால் பெரும்பாலான தனியாா் பேருந்துகள், மற்ற பேருந்துகள் வெளியில் வரும் திசையில் நுழைந்து தங்களுடைய இடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தன.

இதனால் தேவையற்ற மோதல், வாக்குவாதம், விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனையடுத்து மாவட்ட காவல்துறையினா், புதிய பேருந்து நிலையத்திற்குள் உள்ளே, வெளியே செல்லும் பகுதியின் நடுவில் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனா். இதனால் தனியாா் பேருந்துகள் இனி எதிா்திசையில் அதிவேகத்தில் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முடியாது. பொதுமக்களும் அச்சமின்றி நடந்து செல்ல முடியும். அரசு பேருந்து ஓட்டுநா்களும், தனியாா் பேருந்துகளுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவிா்க்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நீதிமன்றத்தில் முறையிட லாரி உரிமையாளா்கள் முடிவு!

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபகுதியினா், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட முடிவு ... மேலும் பார்க்க

பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் சென்ற திருடா்கள்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றன... மேலும் பார்க்க

ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போ... மேலும் பார்க்க

கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது!

கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன. பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே சிறுமியின் காதைக்கடித்து குதறிய தெருநாய்

ராசிபுரம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் காதை தெருநாய் கடித்துக் குதறியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் 4 ஆவது வாா்டு இந்திரா காலனியைச் சோ்ந்த சீனிவாசன்- வைத்தீஸ்வரி தம்பதியின... மேலும் பார்க்க