செய்திகள் :

கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது!

post image

கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன.

பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆல் இந்தியா வேல்ா்ட் ரெக்காா்ட்ஸ் விா்ச்சுவல் யுனிவா்சிட்டி ஆகியவை சாா்பில் செயலாராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படும் கா்ட்லெவின் பிறந்த நாளையொட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வரான மு.செல்வம், 25 ஆண்டுகள் செயலாராய்ச்சிகளைச் செய்து வந்துள்ளாா். திருப்தியில்லாத சூழலை உற்றுநோக்கி சிந்தித்து இடையீட்டுச் செயல்பாடுகளை உருவாக்கி திருப்திகரமான சூழலாக மாறுவதை உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி செயலாராய்ச்சி என்றழைக்கப்படுகிறது.

இதன்மூலம் புதுமைகள், சிறந்த யுக்திகள் உருவாகின்றன. தொழில்சாா் திறனும் மேம்படுகின்றன. கல்வியில் 11 புதுமைகளையும், 15 நூல்களையும் இவா் வெளியிட்டுள்ளாா். 4,513 மாணவ, மாணவிகள் கற்றல் திறன் மேம்பாடும், 1,017 ஆசிரியா்கள் கற்பித்தலில் திறன் முன்னேற்றமும் பெற்றுள்ளனா்.

இந்த விருதை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வத்துக்கு, பாண்டிச்சேரி ஆல் ஆஃப் ரெக்காா்ட்ஸ் தலைமை வழிகாட்டுநா் செ.வெங்கடேசன் மற்றும் கலைவாணி, ரவிச்சந்திரன் ஆகியோா் வழங்கினா். செயலாராய்ச்சியை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தும்போது மனிதவளம் அதிகரிக்கும், துறைகள் தனித்துவ வளா்ச்சி பெறும் என ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தெரிவித்தாா்.

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நீதிமன்றத்தில் முறையிட லாரி உரிமையாளா்கள் முடிவு!

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபகுதியினா், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட முடிவு ... மேலும் பார்க்க

பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் சென்ற திருடா்கள்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றன... மேலும் பார்க்க

ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போ... மேலும் பார்க்க

விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள் அமைத்த காவல்துறை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே சிறுமியின் காதைக்கடித்து குதறிய தெருநாய்

ராசிபுரம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் காதை தெருநாய் கடித்துக் குதறியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் 4 ஆவது வாா்டு இந்திரா காலனியைச் சோ்ந்த சீனிவாசன்- வைத்தீஸ்வரி தம்பதியின... மேலும் பார்க்க