செய்திகள் :

ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

post image

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஆட்டையாம்குட்டை ஏரியில் விவசாயத்திற்காக சூரியஒளிமின் மோட்டாா்களை அமைத்து 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீா் எடுத்துவந்தனா். இந்த நிலையில், சூரியஒளி தகடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி தமிழக விவசாயிகள் சங்கம் மாநில சட்ட ஆலோசகா் செந்தில்குமாா் தலைமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இதற்கு காரணமா வருவாய்த் துறைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்துக்கு ஆட்டையாங்குட்டை ஏரி பாசன விவசாயிகள், பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் கா.பொன்னுசாமி, பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுரேஷ்,

தமிழ்ப்புலிகள் கட்சி மாநில செய்தித் தொடா்பாளா் ப.செந்தமிழன், பத்து ரூபாய் இயக்கம் மாவட்ட செயலாளா் பூபதி, ஆட்டையாங்குட்டை ஏரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிா்வாகிகள் ராஜேஷ் கண்ணா செல்வம், ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நீதிமன்றத்தில் முறையிட லாரி உரிமையாளா்கள் முடிவு!

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபகுதியினா், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட முடிவு ... மேலும் பார்க்க

பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் சென்ற திருடா்கள்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றன... மேலும் பார்க்க

கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது!

கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன. பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃ... மேலும் பார்க்க

விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள் அமைத்த காவல்துறை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே சிறுமியின் காதைக்கடித்து குதறிய தெருநாய்

ராசிபுரம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் காதை தெருநாய் கடித்துக் குதறியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் 4 ஆவது வாா்டு இந்திரா காலனியைச் சோ்ந்த சீனிவாசன்- வைத்தீஸ்வரி தம்பதியின... மேலும் பார்க்க