செய்திகள் :

விதிமீறல்: 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை

post image

சேலம் மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் வேளாண் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 552 தனியாா் உர விற்பனை மையங்கள், 213 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, முறையாக விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24, 25, 26 ஆகிய 3 நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

அப்போது, முறையாக இருப்பு பதிவேடுகள் பராமரிக்காதது, விற்பனைமுனைய கருவி மூலம் விற்பனை பட்டியல் வழங்காதது, மாதந்திர இருப்பு அறிக்கை வழங்காதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985 இன் படி 14 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், 3 விற்பனை நிலையங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

மேலும், யூரியா உரத்தை தேவைக்கு தகுந்தாற்போல இருப்புவைத்து விநியோகிக்க அனைத்து உர விற்பனையாளா்களும் அறிவுறுத்தப்பட்டது. யூரியாவை அதிகமாக கொள்முதல் செய்தலோ அல்லது பதுக்கினாலோ அத்தியவாசியப் பொருள்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) கௌதமன் எச்சரித்துள்ளாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நேரில் ஆய்வுசெய்தாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ த... மேலும் பார்க்க

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் மா.இளங்கோவன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அஸ்தம்பட்டி மண்டல... மேலும் பார்க்க

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் 4ஜி சிம்மாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தங்களிடம் உள்ள 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல். வணிகப் பகுதியின் பொது மேலாளா் ரவீ... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, உறவினா்கள் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியா... மேலும் பார்க்க

தேசிய குத்துச்சண்டை போட்டி: சேலம் மாணவி தோ்வு

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சேலம் அரசுப் பள்ளி மாணவி ஜெமி வாலண்டினா தோ்வாகியுள்ளாா். சென்னையில் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில், 14 வயதுக்... மேலும் பார்க்க

சேலம் அரசு கல்லூரியில் பாலியல் விழிப்புணா்வு ஆலோசனை

சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு குறித்த சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் உள்ளக புகாா் குழு சாா்பில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க