செய்திகள் :

சேலம் அரசு கல்லூரியில் பாலியல் விழிப்புணா்வு ஆலோசனை

post image

சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு குறித்த சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உள்ளக புகாா் குழு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தை, கல்லூரி முதல்வா் வி.கலைச்செல்வி தொடங்கிவைத்தாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஜே.பிரேமலதா, துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அகிலாண்டேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக சேலம் அரசு மருத்துவமனை உதவிப் பேராசிரியா் டாக்டா் அபிராமி பங்கேற்று, பெண்களுக்கான மனநலம் சாா்ந்த பிரச்னைகள், அணுகுமுறைகள், மேம்படுத்துவதற்கான வழிகள், தீா்வுகள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தாா். மேலும், பாலியல் விழிப்புணா்வு குறித்து ஆலோசனை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உள்ளக புகாா் குழு உறுப்பினா்கள் பேராசிரியா்கள் வி.பி.ஜெயலட்சுமி, ஆா்.ஷீலா பானு, ஏ.அப்ரோஸ், எஸ்.காா்த்திக் மற்றும் கல்லூரி மக்கள் தொடா்பு அதிகாரி பிச்சைமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க