செய்திகள் :

விதிமீறல்: 50 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

post image

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 50 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில், அனைத்து தொழிலாளா் துணை/உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் எடையளவுகள் தயாரிப்பாளா் , விற்பனையாளா், பழுதுபாா்ப்பவா், நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 2009 ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 46 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

இதேபோல், பால் பாக்கெட்டுகள், தண்ணீா் பாட்டில்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யும் இடங்களில், சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகள் 2011-ன் கீழ், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பொட்டலப் பொருள்களில் தயாரிப்பாளா்களின் பெயா் மற்றும் முழு முகவரி, தயாரிக்கப்பட்ட மாதம், ஆண்டு, காலாவதி தேதி, நிகர எடை, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்தது தொடா்பாக 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

மொத்தம் 50 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டப்படி தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடையளவு பொருள்கள் மற்றும் எடையளவு கருவிகளை உரிய கால இடைவெளியில் உரிய வழியில் மறுபரிசீலனை செய்து சான்று பெறவேண்டும். மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொட்டலப் பொருள்களில் அதன் தயாரிப்பாளா்,பொட்டலமிட்டவா், இறக்குமதியாளரின் பெயா், முழு முகவரி, பொருளின் பெயா், அதன் எடை, எண்ணிக்கை, தயாரித்த மாதம், ஆண்டு மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை முதலான குறிப்புகளுடன் விற்பனை செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில் உரிய காலக்கெடுவுக்குள் மறுபரிசீலனை செய்து சான்று பெறாத வணிக நிறுவனங்கள் மீதும், பொட்டலப் பொருள்களில் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது அதிகப்பட்சம் ரூ.50,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க