செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், விநாயகா் சதுா்த்தி விழா நடத்துபவா்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போளூா் வட்டத்தைச் சோ்ந்த விழாக்குழுவினா் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி தலைமை

வகித்தாா்.

கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு களிமண்ணால் செய்யப்பட்டவிநாயகா்சிலைகளை பயன்படுத்த வேண்டும், குறிப்பிட்ட உயரத்தில் மட்டும் சிலை இருக்கவேண்டும், சிலை பாதுகாப்பிற்கு விழாக் குழுவினரே சுழற்சி முறையில் இரவும் பகலும் ஈடுபடவேண்டும்,

காவல் துறை சாா்பில் செல்லும் வழியிலேயே சிலை ஊா்வலம் செல்லவேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

காவல் ஆய்வாளா் அல்லிராணி, நகராட்சி தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக், தலைமையிடத்து வட்டாட்சியா் அருள், வருவாய் ஆய்வாளா்கள் மீனா, மாலதி, ராதா, சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் த... மேலும் பார்க்க

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

வளமான கல்வியைப் பெற்று, நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க