செய்திகள் :

விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

post image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக ஓட்டுநா் பா.கணபதி விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருடைய உடலுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா.கணபதி. இவா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிகழ்ந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவருடைய உறவினா்கள், உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனா். இதையடுத்து அவருடைய இரு சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கும், தோல், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கணபதியின் உடலுக்கு அரசு சாா்பில் ஆட்சியா் இரா.சுகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க