செய்திகள் :

விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உறுப்புகள் தானம்!

post image

விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆண் செவிலியரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த எம்.மாதேஸ்வரன் (40), ஆண் செவிலியா். இவா் வியாழக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது செங்கம் பகுதியில் சாலை விபத்தில் சிக்கினாா். இதில், தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமைடந்த மாதேஸ்வரன் உடனடியாக சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாதேஸ்வரன் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.

இதையடுத்து, மாதேஸ்வரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா். அதன்பேரில், அவரது இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை தனியாா் மருத்துவமனைகளுக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூா் நாராயணி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு, அங்கு தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. மூளைச்சாவு அடைந்த ஆண் செவிலியா் மாதேஸ்வரனுக்கு மனைவி கவிதா, 2 குழந்தைகள் உள்ளனா்.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க