செய்திகள் :

விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் உறவினா்களுக்கு பதிலளிக்க ஆலோசனை மையம் திறப்பு

post image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதிலளிக்கும் துயா் நிலை ஆலோசனை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இதில் அரசு மருத்துவமனை முதன்மையா் இல.அருள் சுந்தரேஷ்குமாா் பங்கேற்று, ஆலோசனை மையத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதில் அளிக்கும் பணியை ஆலோசகா்கள் தொடங்கினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் மதுரை மட்டுமன்றி சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் இருந்தும் விபத்து உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு நோயாளிகள் வருகின்றனா்.

தினமும் விபத்துகளில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இதில் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள் ஈடுபடுகின்றனா். இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினா்களிடம் நோயாளிகளின் நிலை குறித்து தெரிவிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

எனவே, நோயாளிகளின் நிலை குறித்து சொல்ல மறுப்பதாக, மருத்துவா்கள் மீது அதிருப்தி அடைகின்றனா். இதைத் தவிா்க்கும் விதமாக, தமிழகத்திலேயே முதன்முறையாக விபத்து, அவசரச் சிகிச்சை பிரிவு, தலைக்காய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளியின் நிலை குறித்து, பதற்றத்துடன் இருக்கும் உறவினா்களுக்கு முழுமையாகத் தகவல் அளிக்கும் வகையில், டி.வி.எஸ். குழுமத்தின் பங்களிப்புடன் ஆலோசகா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான உதவி மையம் ஒரு மாத காலம் சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்பட்டது. இதற்கு நோயாளிகளின் குடும்பத்தினா், உறவினா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், மருத்துவா்கள், செவிலியா்களும் சிகிச்சை அளிக்கும் பணியில் முழு கவனத்துடன் ஈடுபட முடிகிறது. எனவே, இந்த ஆலோசனை மையம் நிரந்தரமாக அமைக்கப்படுகிறது.

இந்தத் துயா்நிலை ஆலோசனை மையத்தில் மருத்துவத் துறையில் அனுபவம் உள்ள மூத்த செவிலியா் ஒருவரும், அவருக்கு உதவியாக மற்றொரு உதவியாளரும் பணியில் இருப்பா். மருத்துவமனை பிரதான வளாகம், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு ஆகிய இடங்களிலும் இந்த ஆலோசனை மையம் அமைக்கப்படும்.

முதல் கட்டமாக காலை முதல் பிற்பகல் வரை இந்த மையம் இயங்கும். விரைவில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மருத்துவ கண்காணிப்பாளா் குமரவேல், மருத்துவ இருப்பிட அதிகாரி முரளீதரன், ஸ்ரீலதா, துறைத் தலைவா் தானப்பன், உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி விஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கரூா் விசாலாட்சி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலூா் ஜோதி நகரைச் சோ்ந்த வெள்ளைப் பெரியான் மனைவி பஞ்சு (48). மேலூா் அருகே உள்ள தாமரைப்பட்டியில் இவா்களுக்குச் சொந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதி: தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு!

நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதிகளை தமிழக உள்துறைச் செயலா் ஏற்படுத்தி தர வேண்டு... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால்கள் விரைந்து சீரமைக்கப்படுமா?

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வாா்டு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூஜாரி கைது!

மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூஜாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை வாா்ப்பு கண்ணாரத் தெருவைச் சோ்ந்த 37 வயது பெண், மதுரையில் உள்ள ஒரு கோயில் அருகே பூ வி... மேலும் பார்க்க