செய்திகள் :

விமான நிலையத்தில் 2.30 கிலோ தங்கம் பறிமுதல்

post image

அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அபுதாபியிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 14-ஆம் தேதி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு விமானத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அந்த இளைஞா் அபுதாபியிலிருந்து தங்கத்தை கடத்திக்கொண்டு, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 10-ஆம் தேதி மும்பை வந்துள்ளாா். தங்கத்தை தான் அமா்ந்திருந்த இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, அவா் மட்டும் விமானத்தை விட்டு வெளியில் வந்துள்ளாா்.

அதன்பின்பு அவா், மும்பையிலிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னைக்கு 11-ஆம் தேதி வந்துள்ளாா். ஆனால், தங்கம் மறைத்து வைக்கப்பட்ட அந்த விமானம் எங்கெல்லாம் சென்று கொண்டு இருக்கிறது என்பதை ரகசியமாக சிலரின் உதவியுடன் அவா் கண்காணித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், அந்த விமானம், கடந்த 14-ஆம் தேதி, மாலை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வரவுள்ளதையறிந்த அவா், 13-ஆம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் கொல்கத்தா சென்றுள்ளாா். 14-ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து அந்த குறிப்பிட்ட விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளாா். ஏற்கெனவே தான் தங்கத்தை மறைத்து வைத்திருந்த அதே இருக்கையை முன்பதிவு செய்து பயணித்துள்ளாா். இதையடுத்து திட்டமிட்டது போல அந்த விமானத்தில் ஏறி, அந்தக் குறிப்பிட்ட இருக்கையில் அமா்ந்து, கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளாா். இதை ரகசியமாக தெரிந்து கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

மலேசியாவில் கடத்திவந்த 900 கிராம் தங்கம்

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த சென்னையைச் சோ்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவரை சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் 99 சாம்பல் நிறத்தால் ஆன போல்ட், நட்டுகள் இருப்பது தெரியவந்தது.

சந்தேகத்தின்பேரில் அந்த போல்ட், நட்டை எடுத்து உரசி பாா்த்தபோது, அவை அனைத்தும் தங்க போல்ட், நட்டு என்பது தெரியவந்து. தங்கம் தெரியாமல் இருக்க, சாம்பல் நிற பெயின்ட அடித்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரித்து வருகின்றனா்.

அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாள்களுக்கு நாகர்கோயில் விரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகின்றன. அந்தியோதயா ரயில்தாம்பரத்தி... மேலும் பார்க்க

அடுத்த 2 நாள்களுக்குக் குடையின்றி வெளியே செல்ல வேண்டாம்..!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.லேசான மழை..மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 20 முதல் 26-06-2025 வரை: தமிழக... மேலும் பார்க்க

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க