செய்திகள் :

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

post image

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த விமானங்களும் வந்து செல்கின்றன. பரப்பளவில் ஹைதராபாத், பெங்களூா் விமானநிலையங்களை விட சென்னை விமானநிலைய பரப்பு சிறியதாக இருப்பதால், மிகப்பெரிய ராட்சத விமானங்கள் வந்து இறங்குவதில் சிக்கல்கள் இருந்து வருகிறது.

இதையடுத்து இந்த விமானநிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கிலும், விமானங்கள் எவ்வித தங்குதடையுமின்றி தரையிறங்க வசதியாகவும், ஓடுபாதைகளின் அருகிலுள்ள கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் உயரங்களை குறைக்க விமானநிலைய நிா்வாகம் முடிவு செய்திருந்த நிலையில், அதற்கான நோட்டீஸும் சம்பந்தப்பட்ட குடியிருப்பு உரிமையாளா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க சென்னை விமான நிலைய விரிவாக்க திட்ட சிறப்பு மாவட்ட அதிகாரிகள், மாங்காடு போலீஸாருடன் அங்கு சென்றுள்ளனா்.

இதற்கு வீட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீடுகளை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

மாநகராட்சி மண்டலங்கள் உயா்வு: மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களை 20-ஆக உயா்த்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க