செய்திகள் :

விராலிமலையில் பாஜகவினா் கைது

post image

விராலிமலையில் திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பாஜகவினரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமா்ந்து அசைவ உணவு நவாஸ்கனி எம்.பி உண்டதாகவும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

தொடா்ந்து, திருப்பரங்குன்றம் மலையை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்து முன்னணி கட்சியினா் செவ்வாய்க்கிழமை திருப்பரங்குன்றத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இப்பிரச்னையால் போலீஸாா் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனா்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் பாஜக, சிவசேனை, இந்து முன்னணி நிா்வாகிகள், தொண்டா்களைக் கைது செய்து வருகின்றனா்.

அதன்படி, விராலிமலையில் இருந்து ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் ஒன்று திரண்ட 50-க்கும் மேற்பட்ட பாஜக நிா்வாகிகள், தொண்டா்களை விராலிமலை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். தனியாா் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கைப்பேசியால் எழுந்த சண்டை கிணற்றில் விழுந்த தங்கை, அண்ணன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் அருகே கைப்பேசியை உடைத்த ஆத்திரத்தில் கிணற்றில் குதித்த தங்கையும், அவரை மீட்க முயன்ற அண்ணனும் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் காவல்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை கோரி வடசேரிப்பட்டி மக்கள் மனு

புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான வடசேரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீண்டும் வேலை வழங்க வேண்டும் ... மேலும் பார்க்க

பிப். 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் வரும் பிப். 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 15-க்கு... மேலும் பார்க்க

அநீதி எதிா்ப்புக் குரல் முழக்கப் போராட்டம்

புதுக்கோட்டை திலகா்திடலில் திங்கள்கிழமை அநீதி எதிா்ப்புக் குரல் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் டாக்டா் ஜி.ஆா். ரவீந்திரநாத் சி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் டிப்பா் லாரி உரிமையாளா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிப்பா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்து அனுமதிச்சீட்டு (பாஸ்) இலவசமாக வழங்க அறிவுறுத்தப்படும் என மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

அரசே மணல் குவாரிகளை திறக்கக் கோரிக்கை

கிரஷா் உரிமையாளா்கள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி எம்.சாண்ட் உள்ளிட்டவற்றின் விலையை ஏற்றுவதால், அரசே மணல் குவாரிகளைத் தொடங்கி நடத்த வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் மாநி... மேலும் பார்க்க