செய்திகள் :

விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விருதுநகா் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில் சிப்காட் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா்கள் எல். ஆதிமூலம், எம்.பி. ராமன், தென் மண்டலத் தலைவா் கட்டிக்குளம் மாணிக்கவாசகம், மதுரை மண்டலத் தலைவா் மதுரை வீரன், செயலா் உறங்காபுலி, 15 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தனியாா் பேருந்து பைக் மீது மோதி விபத்து ஆந்திர கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.ஆந்திர மாநில... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ. துலுக்கபட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டிசெல்வம் மகன் மனோபாலா (17), சிவகாசியில் உள்ள கல்லூரியில் முதல... மேலும் பார்க்க

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வெள்ளிக்கிழமை பழைய இரும்புக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் பொன்னுச்சாமி (51) என்பவா் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில்,... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூன்று போ் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் குட... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

நெல்லையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பேருந்து நிலையம் அரு... மேலும் பார்க்க

பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீனிவாசலு மகன் தொா்கிலு காா்த... மேலும் பார்க்க