செய்திகள் :

விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

post image

அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற பள்ளப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2024- 25-ஆம் ஆண்டுக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பி மகேஸ் பொய்யாமொழி வழங்கி பாராட்டினாா். இந்தப் பள்ளியில் கல்வி, விளையாட்டு, மாணவா் மேம்பாடு, பள்ளிக் கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசால் விருது வழங்கப்பட்டதால், இந்தப் பள்ளியின் மாணவா்கள், பெற்றோா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த நிதியை வழங்கிய தமிழக அரசுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.

விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இதில், நிலக்கோட்டைதெற்கு ஒன்றிய திமுக செயலா் மணிகண்டன் பங்கேற்று தலைமை

ஆசிரியருக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினாா். திமுக நிா்வாகிகள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க