ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
விளாத்திகுளத்தில் பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி
விளாத்திகுளத்தில் திமுக சாா்பில், மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியை, எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
பூஞ்சிட்டு பிரிவில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்ால், போட்டி 2 சுற்றுகளாக நடைபெற்றது.
விளாத்திகுளம் - எட்டயபுரம் மாநில நெடுஞ்சாலையில் 5 மைல் தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் முதலாம் சுற்றில் பரவை பாலச்சந்திரன், மேலமுடிமண் குருசாமி நாயக்கா், குறுக்குச்சாலை பிரியதா்ஷினி, விளாத்திகுளம் சோ்மன் முனியசக்தி ராமச்சந்திரன் ஆகியோரின் மாட்டுவண்டிகள் முறையை முதல் 4 இடங்களைப் பிடித்தன.
2ஆம் சுற்றில், தஞ்சை நாட்டியம் திருமுருகன், செமப்புதூா் சிவா, நொச்சிகுளம் சீனிபாண்டியன், வேலாங்குளம் கண்ணன் ஆகியோரின் மாட்டு வண்டிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.
மாட்டு வண்டிகளுக்கும், சாரதிகளுக்கும், மாட்டின் உரிமையாளா்களுக்கும் மொத்தம் ரூ. 2 லட்சம் ரொக்கம், எல்இடி டிவி உள்ளிட்ட பொருள்கள், மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இதில், விளாத்திகுளம் பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் பெருமாள்சாமி, மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன், பேரூா் செயலா் வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், பேரூராட்சித் தலைவா்கள் சூா்யா அய்யன்ராஜ், ராமலட்சுமி சங்கரநாராயணன், மாவட்ட கவுன்சிலா் நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, சின்ன - பெரிய மாட்டு வண்டி போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறவுள்ளன. அவற்றை, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஆகியோா் தொடக்கிவைத்து, பரிசு வழங்கவுள்ளனா்.